Saturday, December 13, 2025

வங்க கடலில் அடுத்தடுத்து 2 புதிய காற்றழுத்தம் கடலோர மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!!

spot_imgspot_imgspot_imgspot_img

சென்னை : புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி, வங்க கடலில் அடுத்தடுத்து குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருகிறது. கடந்த 20ம் தேதி அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்மேற்கு வங்க கடல் வழியாக இலங்கையை கடந்து நேற்று அரபிக் கடலுக்கு சென்றது. இதன் காரணமாக தென்மாவட்டங்களில் நேற்று பல இடங்களில் கனமழை பெய்தது. அதேபோல், சென்னை, காஞ்சிபுரம், நாகை உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் நேற்று மழை பெய்தது. அதிகபட்சம், ராமநாதபுரத்தில் 14 செ.மீ மற்றும் சென்னை செம்பரம்பாக்கத்தில் 12 செ.மீ மழை பதிவானது.

இதற்கிடையில், தென்மேற்கு வங்க கடலில் நேற்று மற்றொரு காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. இதுவும் இன்னும் ஓரிரு நாளில் தமிழக கடல் பகுதி நோக்கி நகரும் என தெரிகிறது. இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதேசமயம், தெற்கு அந்தமானில் தற்போது புயல் சின்னம் உருவாகியுள்ளது. அங்கு நாளை உருவாகும் மற்றொரு புதிய காற்றழுத்த தாழ்வுநிலை அடுத்த 22 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். இது மேலும் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாற அதிகம் வாய்ப்புள்ளது. எனவே, வங்க கடலில் ஓரிரு நாளில் புயல் உருவாகலாம் என தனியார் வானிலை ஆள்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுபோன்று வங்க கடலில் அடுத்தடுத்து குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதால் சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் வரும் நாட்களில் கனமழை கொட்டும் என வானிலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஸ்டெல்லா கூறுகையில், ‘தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பலவீனமடைந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக அரபிக் கடலில் நிலை கொண்டுள்ளது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள இலங்கை பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும். உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். சென்னையில் விட்டு, விட்டு மிதமான மழை பெய்யும். சில இடங்களில் கனமழை பெய்யும்’ என்றார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை சாலைகளில் மாடுகளால் ஏற்படும் விபத்துகள்: நகராட்சி மாடு பிடி நடவடிக்கை...

அதிராம்பட்டினம் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால்  விபத்துகள் அதிகரித்துள்ளன. கூட்டமாக அமர்ந்து வாகனங்கள் நிலைதடுமாற்றம் ஏற்படுத்துவதாக நகராட்சி கூறுகிறது. இந்த விபத்துக்களுக்கு காரணம் மாடு வளர்ப்பவர்கள்...

பட்டுக்கோட்டை – அதிராம்பட்டினம் இடையே இரவு நேர சிறப்பு பேருந்து..!!

தினசரி  மாலை 6:10 மணியளவில் சென்னை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1:08 மணிக்கு பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்கிறது. அதிராம்பட்டினம் நகராட்சி மற்றும் அதன்...

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி...

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அடுத்து என்ன மற்றும் எங்கு படிக்கலாம் என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி...
spot_imgspot_imgspot_imgspot_img