நாளிதழ், வானொலி, தொலைக்காட்சிகளுக்கு பேட்டி தர அதிமுக நிர்வாகிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. ஊடகங்களுக்கு பேட்டி தரக்கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர் . அதிமுக நிர்வாகிகள் ஒவ்வொருவரும் மாறுப்பட்ட கருத்து கூறுவதை தடுக்க இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா இருந்த போது எந்த ஒரு அமைச்சரும், எம்.எல்.ஏ.வும் பேட்டி எதுவும் தரமாட்டார்கள். அவர் மறைவுக்கு பிறகு பல்வேறு அமைச்சர்கள் மாறுப்பட்ட கருத்து தெரிவித்து சலசலப்பை ஏற்படுத்தி வந்தனர். இதற்கு முடிவு கட்டும் விதமாக அதிமுக தலைமை இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது என்று கூறப்படுகிறது . ஆனால், இந்த உத்தரவை ஏற்று அமைச்சர் ஜெயக்குமார் கட்டுப்படுவாராஎன்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனனில் அவர் ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு தினமும் பேட்டி தருவது வழக்கமாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...
பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது.
சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...
திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு!
அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...





