கொரோனா பெருந்தொற்று காலத்தில் தமிழக மக்களின் அத்தியாவசிய பொருட்கள் தேவையை நிவர்த்தி செய்வதில் ரேசன் கடைகள் முக்கிய பங்கு ஆற்றுகின்றன. இந்த சூழலில் அதிரை ரேசன் கடைகளில் பயோ மெட்ரிக் முறையாக இயங்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டோர் நம்மிடம் கூறுகையில், எங்களது ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி கடந்த காலத்தில் ரேசன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்கினோம். ஆனால்
பொது விநியோக மென்பொருள் தற்போது எங்களின் பயோ மெட்ரிக்கை ஏற்க மறுக்கிறது. இதன் காரணமாக எங்களுக்கான அத்தியாவசிய பொருட்களை பெற முடியாத சூழல் இருப்பதாக கூறினர். மேலும் இந்த பிரச்சனைக்கான தீர்வை பெற தாலுக்கா அலுவலகம் செல்லுமாறு ரேசன் கடை ஊழியர்கள் கூறுவதாகவும், முழு ஊரடங்கு அமலில் உள்ளநிலையில் எவ்வாறு தாலுக்கா அலுவலகம் செல்ல முடியும் என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





