Home » அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தி விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அண்ணாதுரை எம்எல்ஏ எச்சரிக்கை!

அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தி விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அண்ணாதுரை எம்எல்ஏ எச்சரிக்கை!

0 comment

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது. இதனால் இன்று காலை முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அரசு அனுமதித்துள்ளது.

இதனால் காய்கறி, சந்தை உள்ளிட்ட பல இடங்களில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்து கொள்கிறார்கள்.

இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட காய்கனி வியாபாரிகள், கொள்ளை இலாபம் ஈட்டும் நோக்கில் அதிக விலைக்கு காய்கனிகளை விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை தெரிவித்துள்ளதாவது :

சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதிக விலைக்கு அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை பகுதிகளில் காய்கனி விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அவ்வாறு அதிகப்படியாக விற்பனை செய்யும் கடைகள் மீது சட்டப்படி நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனை தன்னார்வலர்கள் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter