அதிராம்பட்டினத்தில் கொரொனா பேரிடர் உதவி மையம் துவக்கி வைத்த அண்ணாதுரை MLA..!தமிழகமெங்கும் பல்வேறு சமுதாய நலப் பணிகளை முன்னெடுத்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத்தில் தென்பகுதியான அதிராம்பட்டினத்தில் மாவட்ட பேரிடர் உதவி மையம் 2 துவக்க விழா ECR ரோடு தவ்ஹீத் பள்ளியில் இன்று நடைபெற்றதுமேற்படி நிகழ்வில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை கலந்துகொண்டு பேரிடர் உதவி மைய நிகழ்வுகளை துவக்கி வைத்தார்.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முன்னெடுத்துவரும் வைரஸ் தொற்று பேரிடர் பணிகளை நெகிழ்ச்சியுடன் பாராட்டினார். இந்நிகழ்வில் பலர் கலந்துகொண்டனர்…