பட்டுக்கோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாத்துரை அவர்கள் வெற்றி பெற்ற நாளில் இருந்து பம்பரமாக சுழன்று தொகுதியின் அவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வன்னம் துறை சார்ந்த இலாகா அமைச்சர்களை அனுகி மனு அளித்து வருகிறார். அதில் குறிப்பாக அதிராம்பட்டினத்திற்கு தீயணைப்பு நிலையம், அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள்,மற்றும் 24மணி நேர சேவை, அதிரை நகருக்கு 110KV துணை மின் நிலையம் என தேவையறிந்து செயலாற்றி வருகிறார். இது குறித்து திமுகவின் முன்னாள் நகர அவைத்தலைவர் மறைந்த பாட்ஷா முகைதீன் மரைக்காயர் அவர்களின் மகன் உமர்தம்பி கூறுகையில், அதிராம்பட்டினத்திற்கு அத்தியாவசிய தேவைகள் குறித்து நடவடிக்கை எடுத்து வரும் நமது சட்ட மன்ற உறுப்பினருக்கு நன்றியை தெரிவித்து கொள்வதோடு, பொது ம்க்களும் முதல்வரின் தனி பிரிவுக்கு மனு அளித்து பணிகளை துரிதப்படுத்த கேட்டு கொள்ள வேண்டும் என்றார். மேலும் தாம் இதுகுறித்து எனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வருக்கு டேக்.செய்து பலமுறை மின்சார்ந்த பிரச்சினைகளை பதிவிட்டு வருவதாக குறிபிட்டுள்ள அவர் அனைவரும் ஒன்றிணைந்து இம்முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.
தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...





