Home » பட்டுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி !

பட்டுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி !

0 comment

பட்டுக்கோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாத்துரை அவர்கள் வெற்றி பெற்ற நாளில் இருந்து பம்பரமாக சுழன்று தொகுதியின் அவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வன்னம் துறை சார்ந்த இலாகா அமைச்சர்களை அனுகி மனு அளித்து வருகிறார். அதில் குறிப்பாக அதிராம்பட்டினத்திற்கு தீயணைப்பு நிலையம், அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள்,மற்றும் 24மணி நேர சேவை, அதிரை நகருக்கு 110KV துணை மின் நிலையம் என தேவையறிந்து செயலாற்றி வருகிறார். இது குறித்து திமுகவின் முன்னாள் நகர அவைத்தலைவர் மறைந்த பாட்ஷா முகைதீன் மரைக்காயர் அவர்களின் மகன் உமர்தம்பி கூறுகையில், அதிராம்பட்டினத்திற்கு அத்தியாவசிய தேவைகள் குறித்து நடவடிக்கை எடுத்து வரும் நமது சட்ட மன்ற உறுப்பினருக்கு நன்றியை தெரிவித்து கொள்வதோடு, பொது ம்க்களும் முதல்வரின் தனி பிரிவுக்கு மனு அளித்து பணிகளை துரிதப்படுத்த கேட்டு கொள்ள வேண்டும் என்றார். மேலும் தாம் இதுகுறித்து எனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வருக்கு டேக்.செய்து பலமுறை மின்சார்ந்த பிரச்சினைகளை பதிவிட்டு வருவதாக குறிபிட்டுள்ள அவர் அனைவரும் ஒன்றிணைந்து இம்முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter