புகையிலை உபயோகிப்பவர்கள் அதிலிருந்து மீள உதவும் வகையில், புகையிலை பொருட்கள் மீது எச்சரிக்கை வாசகங்கள் மற்றும் படங்களுடன் டோல்ப்ரீ நம்பரை அச்சிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுவரை புகையிலை பொருட்களில் எச்சரிக்கை வாசகம் மற்றும் புகைப்படம் அச்சிடப்பட்டிருக்கும், இந்நிலையில் தற்போது அதனுடன் புகையிலைக்கு அடிமையானவர்களை மீட்கபதற்கான டோல்ப்ரீ நம்பர் ஒன்றையும் அச்சிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 1800 227787 என்ற டோல் பிரீ நம்பர் தேசிய புகையிலை தடுப்பு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், புகைக்கு அடிமையானவர்களை மீட்பது தொடர்பான ஆலோசனைகளை பெற முடியும். மேலும் புகையிலையால் ஏற்படும் நோய்கள், அதனால் ஏற்படும் பாதிப்புக்களையும் புகையிலை பொருட்களின் பாக்கெட்கள் மீது அச்சிடவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பித்தக்கதது.
More like this

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!
அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு...

அதிரை சாலைகளில் மாடுகளால் ஏற்படும் விபத்துகள்: நகராட்சி மாடு பிடி நடவடிக்கை...
அதிராம்பட்டினம் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்துகள் அதிகரித்துள்ளன. கூட்டமாக அமர்ந்து வாகனங்கள் நிலைதடுமாற்றம் ஏற்படுத்துவதாக நகராட்சி கூறுகிறது.
இந்த விபத்துக்களுக்கு காரணம் மாடு வளர்ப்பவர்கள்...

பட்டுக்கோட்டை – அதிராம்பட்டினம் இடையே இரவு நேர சிறப்பு பேருந்து..!!
தினசரி மாலை 6:10 மணியளவில் சென்னை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1:08 மணிக்கு பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்கிறது.
அதிராம்பட்டினம் நகராட்சி மற்றும் அதன்...





