Home » குற்ற உணர்ச்சியால் நிம்மதியை இழந்த அதிரை திமுக கவுன்சிலர்கள்!

குற்ற உணர்ச்சியால் நிம்மதியை இழந்த அதிரை திமுக கவுன்சிலர்கள்!

0 comment

அதிரை நகராட்சி மன்ற துணை தலைவர் தேர்தலில் திமுக தலைமையின் சார்பில் நிறுத்தப்பட்ட தில்நவாஸ் பேகத்திற்கு வெள்ளிக்கிழமை காலை வரை நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார் திமுக நகர செயலாளர் இராம.குணசேகரன். ஆனால் அன்றைய பிற்பகலில் திடீரென மறைமுக தேர்தலில் தில்நவாஸ் பேகத்தை எதிர்த்து போட்டியிட்ட அதே இராம.குணசேகரன், கூட்டணி தர்மத்தை மீறி வெற்றிபெற்றார்.

இந்நிலையில், நீ தான் துணை தலைவி என நம்பிக்கை அளித்து களத்தில் இறக்கிவிட்டு கடைசி நேரத்தில் நிராயுதபாணியாக நிறுத்தி தில்நவாஸ் பேகத்தை தோல்வி அடைய செய்ததை எண்ணி அதிரை திமுக  அதிருப்தி கவுன்சிலர்கள் தூக்கத்தை தொலைத்து நிம்மதியை இழந்து விட்டதாக தெரிகிறது.

ஆயிரமாயிரம் இடர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினே, கூட்டணி தர்மத்தை மீறிய திமுக-வினரின் செயல் காரணமாக குற்ற உணர்ச்சியால் குறுகி நிற்பதாக அறிவித்திருக்கிறார். இதனிடையே செய்த தவறுக்கு எவ்வாறான வகையில் பரிகாரம் தேடிக்கொள்ள போகிறார்கள் அதிரை திமுக அதிருப்தி கவுன்சிலர்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter