Monday, December 1, 2025

மல்லிப்பட்டினத்தில் மீனவர்கள் சாலை மறியல்(படங்கள்)!!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் மீனவர்கள் சாலை மறியல்.

ஓகி புயல் அச்சம் நீங்கிய பிறகும் மீன்வளத்துறை அதிகாரிகள் கடலுக்கு யாரையும் அனுமதிப்பதில்லை.இதனால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,மேலும் ஓகி புயல் காரணமாக காணாமல் போன கன்னியாகுமரி மீனவர்களை உடனடியாக அரசு போர்கால அடிப்படையில் மீட்காததை கண்டித்தும் இன்று(9.12.2017) தஞ்சை மாவட்ட மீனவர்கள்  சாலை மறியல் செய்தனர்.

இதனையறிந்து வந்த காவல் துறை அதிகாரிகள் ஆர்டிஓ பேச்சுவார்த்தைக்கு வருவதாகவும் என்று கூறியதால் மீன்வர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.மறியல் காரணமாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பாக காணப்படுகிறது.

இதற்கிடையில் நாகை சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி சம்பவ இடத்திற்கு வந்து மீனவ பிரதிநிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து உரிய அதிகாரிகளிடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

மறியல் போராட்டத்தில் சங்கதலைவர் A.தாஜுதீன், மாவட்ட தலைவர் ஆ.இராசமாணிக்கம்,மாவட்ட செயலாளர் ஆ.வடுகநாதன்,கள்ளிவயல் தோட்ட சங்க பொருளாளர் அ.இப்றாகிம் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img