Sunday, February 1, 2026

தடதட ரோடால் தடுமாறி விழும் வாகன ஓட்டிகள் : கண்டு கொள்வாரா 12வது வார்டு திமுக கவுன்சிலர்..?

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் 12வது வார்டுக்கு உட்பட்ட நடுத்தெரு கீழ்புறம் 3வது சந்தில் தார்சாலை சிதிலமடைந்து கருங்கற்களாக சிதறிக்கிடப்பதால் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் சறுக்கியபடி விபத்திற்குள்ளாவது வாடிக்கையாகி வருகிறது.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக போடப்பட்ட இந்த தார்சாலை முற்றிலும் சேதமடைந்ததோடு, மழைக்காலங்களில் மீதமிருக்கும் கருங்கற்களும் பெயர்ந்து வருவதால் இந்த சாலை மிகவும் கரடுமுரடானதாகவும் இவ்வழியே பள்ளிவாசல்கள் மற்றும் பொது இடங்களுக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இது குறித்து இப்பகுதியில் வசிக்கும் 48 வயது மதிக்கத்தக்க ஒருவர் கூறுகையில்,

5 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் வரும் போதெல்லாம் புதிய சாலை அமைத்து தருவதாக சொல்லி எங்கள் வாக்குகளை பெற்றுவிட்டு வெற்றியடைந்ததும் எங்கள் வார்டில் இருக்கும் குறைகள் மற்றும் தேவைகளை நிவர்த்தி செய்யாமல் இருப்பது வேதனையளிப்பதாகவும் மேலும், கடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர் ராளியா முகமது சுகைப் விரைவில் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் தேவையாக இருக்கும் புதிய தார்ச்சாலையை அமைத்து தருவார் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருப்பதாகவும், ஒரு வேலை அவரும் அப்பணியை செய்யாமல் மற்ற கவுண்சிலர்களை போல கண்டும் காணாமல் கடந்தால் அடுத்த தேர்தலில் 12வது வார்டு மக்களின் எண்ண ஓட்டங்களை தேர்தல் முடிவுகள் சொல்லும் எனக் கூறியுள்ளார்.

12வது வார்டு மக்களின் நம்பிக்கைக்குரிய திமுக கவுன்சிலராக இருக்கும் ராளியா முகமது சுகைப் புதிய தார்சாலை அமைத்து கொடுப்பாரா அல்லது இப்பகுதி மக்களின் தேவை எப்பொழுதும் போல் வெறும் காணல் நீர் தானா என்பதை காலமும் இப்பகுதியின் கவுன்சிலரும் தான் பதில் சொல்ல வேண்டும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img