தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் செயல்பட கூடிய அரசு மருத்துவமனையை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இங்கு இரவுநேர மருத்துவர்கள் பணியில் இல்லாததால் அவசர தேவைக்கு 24மணிநேரம் இயங்க கூடிய ஷிஃபா மருத்துவமனையை பொதுமக்கள் அணுகுகின்றனர். இந்நிலையில், பகல்நேரத்திலும் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கும் சூழல் நிலவுகிறது. குறிப்பாக படுக்கை வசதியில்லாமல் நடைபாதைகளில் நோயாளிகள் தங்க வைக்கப்பட்டு சுகாதாரமற்ற முறையில் வைத்தியம் பார்க்கப்படுகிறது. இவ்வாறான மக்கள் பிரச்சனைகளை உள்ளூர் அரசியல் புள்ளிகள் கண்டுக்கொள்ளாமல் பட்டா நிலத்தில் மக்களின் நலனுக்காக கட்டப்படும் மருத்துவமனை பணியை குண்டர் படையுடன் தடுத்தி நிறுத்தியது அதிரை மக்களை முகம் சுளிக்க செய்திருப்பதாக விபரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





