கடற்கரை நகரான அதிரையில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் ஆரம்பம் முதலே அதிகமாக உணரப்பட்டது. இதன் காரணமாக பகல் நேரங்களில் வெளியில் நடமாடுவதை பெரும்பாலும் பொதுமக்கள் தவிர்த்து வந்தனர். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான உச்சப்பட்ச வெயில் இன்று 107.6 ஃபேரன்ஹீட்டாக பதிவாகியுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு அதிகபட்ச வெப்பம் மே மாதத்தில் 105.8 ஃபேரன்ஹீட் ஆகும். அக்னி நட்சத்திரம் நிறைவடைந்த பிறகு அதிரையில் இந்த ஆண்டுக்கான அதிகபட்ச வெப்பம் பதிவாகி இருப்பதால் வரும் காலங்களில் வெயிலின் தாக்கம் எப்போது குறையும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.
More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...





