அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் குஜராத் வருகையின் போது, சாலையோர மக்களின் வசிக்குமிடங்களை திரை சீலையமைத்து மறைத்தார் மோடி !
வளர்ந்த மாநிலம் என விட்ட புருடாவெல்லாம் புஸ்வானமாகி விடக்கூடாது என்பதை கன்னும் கருத்துமாக பார்த்துக் கொண்டது ஆளும் பாஜக அரசு.
அதே பாணியை அச்சுபிசகாமல் அரங்கேற்றம் செய்திருக்கிறது முத்துப்பேட்டை பேரூராட்சி !
தாலுக்கா அந்தஸ்த்திற்கு தரமுயர்ந்த இந்த ஊரிற்கே இந்த நிலமை என்றால் மற்ற ஊர்கள் எல்லாம் எம்மாத்திரம்?
கலைஞர் கோட்டம் திறப்பு விழாவிற்கு முதல்வர்,அமைச்சர்கள் இவ்வூருக்கும் வரக்கூடும் என்பதால் முன்னேற்ப்பாடாக இந்த ஒளிப்பு நடவடிக்கைகளை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
குப்பைகளை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ள மத்திய மாநில அரசுகள் எவ்வளவுதான் கத்தினாலும் கண்டு கொள்ளாத நிர்வாகிகளை என்னவென்று சொல்வது? என புழுங்கி தள்ளுகிறார்கள் முத்துப்பேட்டை மக்கள்.