தினமும் திருச்சியிலிருந்து ஏராளமான உள்நாடு வெளிநாடுகளுக்கு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது.
அமீரகத்தின் ஷார்ஜா நகருக்கு தினமும் காலை 10-45மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் சேவையை வழங்கி வருகிறது.
இவ் விமானத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்ததால் இவ் விமானத்தில் பயணிக்க பயணிகள் ஆர்வம் காட்டினர் அதன் அடிப்படையில் திருச்சி சார்ஜா கூடுதல் விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளதாக விமான நிலைய சேவை அதிகாரி MMS ஜாபர் சாதிக் கூறினார்.
அதன்படி திங்கள்கிழமை தோறும் அதிகாலை 1-20ற்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு 4-10ஷார்ஜா சென்றடையும் மறு மார்க்கத்தில் அதிகாலை 5-10ற்கு புறப்பட்டு நண்பகல் 11 மணிக்கு திருச்சி பன்னாட்டு விமான நிலையம் வந்தடையும் என கூறுகிறார்.