அதிரை இளைஞர் கால்பந்து கழகம் 28ம் ஆண்டு நடத்தும் SSM குல் முகம்மது நினைவு 23ம் ஆண்டு மாபெரும் கால்பந்து தொடர் போட்டி கடந்த 12/06/2023 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.
இதில் நேற்று(04/07/2023) நடைபெற்ற பதினெட்டாம் நாள் ஆட்டத்தில் பாலு மெமோரியல் திருச்சி அணியினரும் NFC திருச்சி அணியினரும் மோதினர். விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்ற இவ்வாட்டத்தில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் ஆடி முடித்தன. இதையடுத்து நடைபெற்ற ட்ரைபிரேக்கரில் பாலு மெமோரியல் திருச்சி அணி, NFC திருச்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.