ஃப்ரண்ட்ஸ் ஃபாரெவர் நடத்தும் மாபெரும் மின்னொளி எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் துவங்க உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் தொடங்க உள்ள இத்தொடரில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்க உள்ளன.
இத்தொடரில் முதல் பரிசாக ரூ. 1,00,023; இரண்டாம் பரிசாக ரூ. 50,023; மூன்றாம் பரிசாக ரூ. 25,023, நான்காம் பரிசாக ரூ. 25,023 மற்றும் சுழற்கோப்பைகள் வழங்கப்பட உள்ளன.
இன்று வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் மாலை 5 மணிக்கு தொடங்கி அதிகாலை 2 மணி வரையிலும் போட்டிகள் நடைபெற உள்ளன. இன்று மாலை 6 மணி முதல் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.