மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம். முகம்மது சரீஃப் அவர்களின் மகனும், மர்ஹூம். முகம்மது இப்ராகிம் அவர்களின் மருமகனும், மர்ஹூம். சாபீன், ஜெகபர் சாதிக், சாகுல் ஹமீது ஆகியோரின் சகோதரரும், அபூபக்கர், மர்ஹூம். முகம்மது சேக்காதி, சரபுதீன், அப்துல் கஃபூர், அகமது அன்சாரி ஆகியோரின் சகலையும், தமீம் அன்சாரி அவர்களின் மைத்துனரும், முகம்மது சரீஃப், அகமது சாஜத் ஆகியோரின் தகப்பனாருமாகிய அன்வர் சதாத் அவர்கள் இன்று 08/10/2023 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:00 மணியளவில் CMP லைன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 08/10/2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணியளவில் கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.