அதிராம்பட்டினம் வாய்க்கால் தெருவில் இயங்கி வரும் நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு நான்கு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு 69 லட்சமும், பள்ளியின் பராமரிப்பு பணிகளுக்காக 24.5 லட்சமும் மாநில நிதிக்குழு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக புதிய வகுப்பறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை வாய்க்கால் தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இதில் இதில் நகரமன்றத் தலைவரின் கணவர் M.M.S.அப்துல் கரீம், நகரமன்ற துணைத் தலைவர் இராம.குணசேகரன், ஷம்சுல் இஸ்லாம் சங்க தலைவர் முஹம்மது சாலிஹ், நகரமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டார்கள்.