அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் ஆதரவாளர்களை நீக்கும்பணி தற்போது நடந்து வருகிறது. அதன்படி, திருப்பூர், புதுக்கோட்டை, தருமபுரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் 133 பேர் நீக்கப்படுவதாக ஓபிஎஸ் – ஈபிஎஸ் அறிவித்துள்ளனர். நீக்கப்பட்டவர்களுடன் அதிமுகவினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்றும் ஓபிஎஸ்-ஈபிஎஸ் உத்தரவிட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் முன்னாள் எம்பி சிவசாமி உட்பட 66 பேர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 49 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் தருமபுரி மாவட்டத்திலும் 18 பேர் என மொத்தம் 133 பேர் நீக்கப்படவுள்ளனர்என்று தகவல் வெளியாகியுள்ளது
More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.
தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...





