அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் ஆதரவாளர்களை நீக்கும்பணி தற்போது நடந்து வருகிறது. அதன்படி, திருப்பூர், புதுக்கோட்டை, தருமபுரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் 133 பேர் நீக்கப்படுவதாக ஓபிஎஸ் – ஈபிஎஸ் அறிவித்துள்ளனர். நீக்கப்பட்டவர்களுடன் அதிமுகவினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்றும் ஓபிஎஸ்-ஈபிஎஸ் உத்தரவிட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் முன்னாள் எம்பி சிவசாமி உட்பட 66 பேர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 49 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் தருமபுரி மாவட்டத்திலும் 18 பேர் என மொத்தம் 133 பேர் நீக்கப்படவுள்ளனர்என்று தகவல் வெளியாகியுள்ளது
More like this

அதிராம்பட்டினம் ஐயுஎம்எல் சார்பில் தேர்தல் நிதி வழங்கப்பட்டது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) சார்பில், வரும் தேர்தலில் வாணியம்பாடி மற்றும் பாபநாசம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளுக்காக,...

தேர்தல் களம்: அண்ணாத்துரையின் செல்வாக்கு!
பட்டுகோட்டை தொகுதியில் கா. அண்ணாத்துரை (திமுக) அவர்களைப் பொறுத்தவரை கள நிலவரம் தற்போது மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கிறது. கடந்த முறை பெற்ற...

திராவிட இஸ்லாமிய கழக வேட்பாளராக அதிரை நிசார் அகமது ராயபுரத்தில் களம்!
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை ராயபுரம் தொகுதியில் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. இத்தொகுதியில், திராவிட இஸ்லாமிய கழகத்தின் சார்பில் அதிரை...





