Saturday, May 4, 2024

அதிராம்பட்டினம் மின் வாரியத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்- திடீர் பரபரப்பில் மின் வாரியம்..!!

Share post:

Date:

- Advertisement -


அதிரை 110கி.வா துணை மின் நிலையத்திற்கு கோபுரங்கள் அமைக்க தனியார் விளை நிலங்களை அரசு பயன்படுத்தியுள்ளது.

இதற்க்காக இழப்பீட்டு தொகை பெற்று தருவதாக கூறி மின்வாரிய அதிகாரிகள் மேற்கூறிய இடங்களை கையகப்படுத்தி உயரழுத்த மின் கடத்திகளை பொருத்தியுள்ளனர்.

100 சதவீத பணிகள் முடிவடைந்தும், இழப்பீட்டு  தொகையினை குறிப்பிட்ட விவசாயிகளுக்கு வழங்க்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் குறைதீர் முகாமிலும் அவ்வப்போது மனு அளித்தும் பலனில்லை என்கின்றனர்.

இந்த நிலையில், இன்று தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக அதிராம்பட்டினம் 110KV துணை மின் நிலையத்தை திறந்து வைக்க இருக்கிறார்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் அதிராம்பட்டினம் மின் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், உரிய இழப்பீட்டு தொகையினை அறிவித்தப்படி கொடுக்க வேண்டும் என்றும் தவறினால் முதல்வரின் கவனத்தில் ஈர்க்கும்படியான போராட்டத்தை முன்னொடுப்போம் என்றனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...

மரண அறிவிப்பு : புதுமனை தெருவை சேர்ந்த A.M. முகம்மது சாலிஹ் அவர்கள்..!!

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ அஹமது முஸ்தபா அவர்களின் மகனும்,...

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...