அதிராம்பட்டினத்தில் இயங்கி வரும் தாலுக்கா துணை மருத்துவமனையை 24மணி நேரமும் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையை விஸ்தீரனம் செய்து நகராட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அதன்படி இன்று(06/03/2024) புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா தொடங்கியது. அப்போது பேசிய அதிரை நகர்மன்ற தலைவர் MMS.தாஹிரா அம்மாள் அப்துல் கரீம் கூறுகையில், வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் நமதூர் அரசு மருத்துவமனையை 24 மணி நேரமும் இயங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.