தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சமீபகாலமாக சாலை விபத்துகள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சிறுவர்கள் கண்மூடித்தனமாக அதிவேக பைக்குகளை இயக்கி விபத்துக்களை ஏற்படுத்துகின்றனர். இந்தநிலையில் இன்று பிற்பகல் சேர்மன்வாடி அருகே மூதாட்டி ஒருவரை சிறுவர்கள் ஓட்டிவந்த பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த அந்த மூதாட்டியை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்றவர்களையும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.