தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை அருகே மின்கம்பம் ஒன்று சாலையோரத்தில் சாய்ந்து கீழே முறிந்து விழும் நிலையில் உள்ளது.
அதிரை வண்டிப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் பிரதான சாலையின் (தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் இமாம் ஷாஃபி பள்ளிக்கு அருகே உள்ள சாலை) ஓரத்தில் உள்ள மின் கம்பம் சாலையில் முறிந்து விழும் நிலையில் சமீபகாலமாக இருந்து வருகிறது. இந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் முறிந்து சாலையில் செல்லும் வாகனத்தின் மேல் விழுந்து சாலை விபத்துகள் மட்டுமின்றி மின்சாரம் தாக்கி உயிர் இழப்பு ஏற்படுத்துவதற்க்கு வாய்ப்புள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் :-
மாதந்தோறும் பராமரிப்பு பணி என்கிற பெயரில் மின்சார வாரியம் என்ன தான் செய்கின்றது என்ற கேள்வியை முன் வைத்துள்ளனர்.
மேலும், அதிரையில் பல்வேறு பகுதியில் இதே போல் சாலை ஓரங்களில் உள்ள மின்கம்பங்கள் பழுதாக உள்ளது என்றும், அதனையும் விரைவில் சரி செய்து தங்களுடைய கடமைகளை செயல்படுத்துமாறு மக்கள் மத்தியில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதன் பின்னராவது அதிரையில் உள்ள TNEB தமிழ்நாடு மின்சார வாரியம் நடவடிக்கை மேற்கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.