புனிதமிகு ரமலான் மாதத்தில் ஜப்பான் வாழ் அதிரை குடும்பங்கள் உட்பட சுமார் 120க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இஃப்தார் சந்திப்பு நிகழ்வு நேற்று(07-04-24) ஞாயிற்றுக்கிழமை மாலை அமைதியாகவும், சிறப்பாகவும் நடந்து முடிந்தது.
நிகழ்வில், சிறப்பு அழைப்பாளpராக பங்கேற்ற அஷிகஹா மஸ்ஜித்துன் நூர் பள்ளிவாசல் இமாம் அவர்களின் சிறப்பு பயான் மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது.
நிகழ்வின் முடிவில் மஹ்ரிப் தொழுகை நடைபெற்றது.
அழைப்பை ஏற்று இந்நிகழ்வில் பங்கேற்ற அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மிக்க நன்றி தெரிவிக்கப்பட்டது.
இப்பணிக்காக தங்களது பெரும்பாலான நேரத்தையும், நிதியுதவியையும் இரவு, பகலாக வழங்கிய நல்லுள்ளங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.