Thursday, March 19, 2026

அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் பசுமைப்பயணம்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை சுற்றுச்சூழல் மன்ற தலைவர் வ.விவேகானந்தம் செயலாளர் எம்.எப்.முஹம்மது சலீம், பொருளாளர் எம்.முத்துக்குமரன், துணை செயலாளர் மரைக்கா.கே.இத்ரீஸ் அஹமது,தணிக்கையாளர்என்.ஷேக்தம்பி, விதை அறக்கட்டளை நிறுவனர் சக்திகாந்த் ஆகியோர் ஆத்திக்கோட்டை மேலக்காடு கிராமத்தில் உள்ள அருள்மிகு முருகன் கோவில் தோட்டத்தில் கிராம மக்களால்  வளர்க்கப்பட்டு வரும் புனித காடுகளை பார்வையிட்டனர்.

ஆதிபராசக்தி வாரவழிபாட்டுமன்றத்தின் மாவட்ட தலைவர்.செம்பாளூர்.வை.முத்துவேல் மற்றும் வெற்றி ஆகியோர் அங்கு வளர்க்கப்படும் செம்மரம், வேம்பு, வேங்கை ஆகிய மரங்களையும் முருகன் கோவிலில்  உள்ள மருத்துவ குணம் நிறைந்த இருநூறு ஆண்டுகள் வயதுள்ள உதிர வேங்கைமரம் மேலும் அப்பகுதியில் காணப்படும் தும்பை , கவிழ்தும்பை, மூக்கிரட்டை , ஆதண்டை, நன்னாரி, விஷ்ணுகிரந்தி, துளசி,பழம்பாசி போன்ற மூலிகைகளைப்பற்றியும் விளக்கமளித்தனர்.

மழை நீர் சேமிப்பிற்காக வெட்டப்பட்ட குளத்தையும் சுற்றுச்சூழல் மன்றத்தினர் பார்வையிட்டனர்.

அடிக்கடி இயற்கை முக்கியத்துவம் வாய்ந்த இதுபோன்ற இடங்களுக்கு சென்று பார்வையிட்டு விபரங்களை சேகரித்து பொதுமக்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டது

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img