அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டிணத்தில் பாப்புலர் ஃபரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை சார்பாக இரத்த வகை சேர்க்கை முகாம் நடைபெற்றது.
அவசர காலத்தில் இரத்தங்கள் தேவைப்படும்போது தொடர்பு கொள்வதற்கு எளிதான முறையில் கையாள, மேலும் தேவைகளை கருத்தில் கொண்டு இரத்த கொடையாளிகளை பயன்படுத்த மல்லிப்பட்டிணம் சமூக மேம்பாட்டு துறை சார்பாக இன்று மதியம் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு இரத்தவகை சேர்க்கை முகாம் நடைபெற்றது.இதில் பலர் ஆர்வத்துடன் தங்களுடைய பெயரையும்,தொலைபேசி எண்களையும், இரத்த வகையையும் கொடுத்தனர்.













