அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று(26/01/2018) காலை அதிரை கடலோர பாதுகாப்பு குழும அலுவலகத்தில் 69வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
இதில் அதிரை கடலோர பாதுகாப்பு குழுமத்தின் காவல் அதிகாரி அந்தோணி சாமி அவர்கள் தேசியக் கொடி ஏற்றினார்.இந்த நிகழ்ச்சியில் மற்ற கடலோர காவல் அதிகாரிகளும் கலந்துக்கொண்டு குடியரசு தினத்தை சிறப்பித்தனர்.














