Wednesday, March 18, 2026

அதிரையில் துருப்பிடித்த மின்கம்பங்களை மாற்ற கோரிக்கை விடுத்துள்ள சமூக ஆர்வலர் ஹாலிக் அவர்கள்..!

spot_imgspot_imgspot_imgspot_img

சமூக சேவகரின் மகத்தான பணி..

தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினத்தில் பல இடங்களில் குறிப்பாக கடற்கரை தெரு தர்கா மற்றும் புதுமனை தெரு, செக்கடி பள்ளி (மசூதி) பின்புறம் உள்ள மின்கம்பம் எண் 948 ஆகிய இரு மின் கம்பங்கள் மேல்பாகம் முதல் கீழ்ப்பாகம் வரை துருப்பிடித்த நிலையில் உள்ளது.இதனை மின்வாரிய துறையும் சரியான முறையில் கண்டுகொள்வதும் இல்லை.
இந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் அறுந்து விழுந்து உயிர் சேதம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, இதனை கருத்தில் கொண்டு அதிரையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஹாலிக் அவர்கள் மின்வாரிய துறை பட்டுக்கோட்டை முகாமில் இந்த மின்கம்பங்களை மாற்றி தருமாரு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த இரு மின்கம்பங்களை மாற்றி அமைக்கப்படுமா..?

சமூக சேவகர் அப்துல் காலிக் (மரைக்கா) அவர்கள் தன் உடல் நிலையையும் பொருட் படுத்தாமல் பட்டுக்கோட்டை பாளயம் மின் பொறியாளர் அலுவலகத்தில் (22/02/2018) வியாழக் கிழமை நடந்த மின் நுகர்வோர் குறைத் தீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தவை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img