Friday, May 3, 2024

கேரளாவிற்கு ஐக்கிய அமீரக அரசு ₹700 கோடி நிதி உதவி!!

Share post:

Date:

- Advertisement -

கேரளாவில் பெய்து வடமேற்கு பருவமழை மிகத் தீவிரமடைந்து கண மழை கொட்டி தீர்த்தது. இதனால் கேரள மாநிலமே வெள்ளத்தில் மூழ்கியது.

இடுக்கி போன்ற இடங்களில் நிலச்சரிவுகளும் உயிர் பலிகளும் ஏற்பட்டது.

இன்று அம் மாநில முதல்வர் நிவாரணம், நிதி உதவி பற்றி திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, சட்டப்பேரவையில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட சபாநாயகருக்கு வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வரும் 30ம் தேதி சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்படும் என்றும் கேரளாவில் மீட்புப் பணிகள், நிவாரணம், மறுசீரமைப்பு குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட இந்திய பிரதமர் மோடி ரூ.500 கோடியை கேரள மாநிலத்துக்கு வெள்ள நிவாரணத்திற்காக அறிவித்திருந்தார்.

மேலும் அவர் கூறுகையில், கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை கண்டு வளைகுடா நாடுகளில் உள்ளவர்கள் தங்கள் வீடுகளில் வெள்ளம் வந்தது போல உணர்கிறார்கள். அபுதாபி அரசர் தினசரி தொடர்பு கொண்டு வெள்ள நிலைமைகளைக் கேட்டறிகிறார். வெள்ளம் பாதித்த கேரளாவுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ரூ.700 கோடியை நிதியுதவியாக அளித்துள்ளது.

உலகம் முழுவதும் வாழும் தமிழ மற்றும் மலையாள மக்கள் தாராளமாக நிதி உதவி அளித்து வருகின்றனர் என்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...