Thursday, February 5, 2026

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!!

spot_imgspot_imgspot_imgspot_img

கடந்த 5 வருடங்களில் இல்லாத அளவிற்கு பொருளாதார வீழ்ச்சிக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

விலைவாசி அதிகரித்ததால் மக்கள் அன்றாட தேவைகளுக்கு கூட திண்டாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மத்திய அரசு கலால் வரியை குறைக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் பலமுறை வலியுறுத்தியும் இதற்கு செவி மடுக்காமல் இருந்து வருகிறது.

இதனையடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை பாரத் பந்த் எனும் நாடு தழுவிய முழு அடைப்பு நடைபெற உள்ளது.

இந்த முழு அடைப்பிற்கு நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.

இதனிடையே புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்து, நாளை பாரத் பந்த் எனும் முழு அடைப்பிற்கு புதுச்சேரி அரசு ஆதரவு அளிப்பதாகவும், மேலும் புதுச்சேரி பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாகவும் அறிவித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img