Saturday, March 28, 2026

220 வாக்காளர் அட்டைகள் தி.மு.க.,வினரிடம் பறிமுதல்!!

spot_imgspot_imgspot_imgspot_img

சென்னை, ஆதம்பாக்கம், மேடவாக்கம் மெயின் ரோட்டில்,ஆலந்துார் சட்டசபை தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி, பாலசுப்பிரமணியம் தலைமையில், அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு, வாகனசோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, தி.மு.க., கொடியுடன் வேகமாக வந்த காரை, பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அதில், கட்டு கட்டாக, தென்சென்னை லோக்சபா தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களின், வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்தன.

அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், இது தொடர்பாக விசாரித்தபோது, காரில் வந்தவர்கள், முன்னுக்கு பின்முரணாக பதிலளித்தனர்.இது குறித்து,பறக்கும் படையினர், உயர் அதிகாரிகளுக்கு தகவல்தெரிவித்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட, 220 வாக்காளர் அடையாள அட்டைகள், காரில் அவற்றை கொண்டு வந்த உள்ளகரம், 168வது வார்டு, தி.மு.க., வட்ட செயலர், திவாகர், 37,மற்றும் ஆறு தி.மு.க., பிரமுகர்கள், ஆதம்பாக்கம்காவல் நிலையத்தில்ஒப்படைக்கப்பட்டனர்.அவர்கள் மீது, வாக்காளர்களை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்டமூன்று பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்கு பதிந்து, ஏழு பேரிடமும் தொடர்ந்து விசாரிக்கின்றனர்..

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் மீண்டும் களமிறங்குகிறார்கா. அண்ணாதுரை!

நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக நேரடியாக 164 தொகுதிகளில் களம் காண்கிறது. 11 இடங்களில் கூட்டணி கட்சிகள் உதய சூரியன்...

தஞ்சை மாவட்ட எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம்!

தஞ்சை மாவட்ட எஸ்பி ஆக இருந்த ராஜாராம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில்...

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...
spot_imgspot_imgspot_imgspot_img