அதிராம்பட்டினம், மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்கம் (TIYA), தாமரங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து டெங்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் மேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பாலகர்வாடி வளாகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமில், தாமரங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் டாக்டர் பி.பிரியதர்சினி, டாக்டர் சோமசுந்தரம் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினா், முகாமில் பங்கேற்ற மேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவா்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் மருத்துவப் பரிசோதனை செய்து மருந்து, மாத்திரை வழங்கினர். மேலும், டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. TIYA அமைப்பின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.