Sunday, May 5, 2024

அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம்; முஸ்லீம்களுக்கு மாற்று நிலம் வழங்க வேண்டும் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு !

Share post:

Date:

- Advertisement -

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் அயோத்தி வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடமான 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்று பிரச்சனைதான் இந்த முக்கிய வழக்கிற்கு காரணம் ஆகும்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், டி.ஒய். சந்திரசூட், எஸ்.ஏ. பாப்டே, அப்துல் நசீர், அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்தது.

அதில் கடந்த 2010ம் ஆண்டு சர்ச்சைக்குரிய நிலத்தை 3 ஆக பிரித்து கொடுத்த அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறு என கூறியுள்ளது.

மேலும் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்துக்களுக்கே சொந்தம் என்றும் அங்கே ராமர் கோயில் கட்ட மூன்று மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.

இஸ்லாமியர்களுக்கு மத்திய அரசோ அல்லது மாநில அரசோ 5 ஏக்கர் மாற்று நிலத்தை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி சர்ச்சைக்குரிய நிலம் தங்களுடையது தான் என்பதை நிரூபிக்க இஸ்லாமிய அமைப்புகள் தவறிவிட்டதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...