Saturday, May 4, 2024

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு வழங்கிய நீதிபதி மீது பாலியல் புகார் கூறியவருக்கு மீண்டும் பணி ஆணை..!

Share post:

Date:

- Advertisement -

தன்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்த கோகோய் முயன்றதாகவும் அதைத் தவிர்த்த காரணத்தால் தன்னையும் தனது குடும்பத்தையும் அவர் துன்புறுத்தியதாகவும் அந்த ஊழியர் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தன்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகப் புகார் அளித்த ஊழியர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக நீதிமன்றச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தன்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்த கோகோய் முயன்றதாகவும் அதைத் தவிர்த்த காரணத்தால் தன்னையும் தனது குடும்பத்தையும் அவர் துன்புறுத்தியதாகவும் அந்த ஊழியர் தனது புகாரில் தெரிவித்திருந்தார். அவர் பணியில் இல்லாத இடைப்பட்ட காலத்தில் அவருக்குக் கொடுக்கப்பட வேண்டிய சம்பளமும் தரப்பட்டதாகத் தெரியவருகிறது.

கோகாய் மீது புகார் தெரிவித்த நிலையில் குறிப்பிட்ட அந்த ஊழியர் உச்ச நீதிமன்றத்திலேயே துறை மாற்றப்பட்டார். பிறகு, பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். அதன்பிறகு, அந்த ஊழியரின் கணவர் மற்றும் கணவரின் சகோதரர் மீது டெல்லி போலீஸ் வெவ்வேறு காரணங்களுக்காக வழக்குப் பதிவு செய்தது. தன்னையும் தங்களது குடும்பத்தையும் அச்சுறுத்தவே நீதிமன்றம் இப்படிச் செய்வதாக அந்த ஊழியர் புகார் கூறியிருந்தார்.

நன்றி விகடன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...