இன்று சென்னையில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக ஜமாத்துல் உலமா மாநில தலைவர் ஹாஜா மொய்தின் ஹஜரத் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் NRC, NPR, CAA சட்டங்களை கண்டித்தும், சென்னை வண்ணாரப்பேட்டையில் போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்ற கோரியும் தமிழகம் முழுவதும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் இணைந்து சட்ட மன்றம் முற்றுகை, மற்ற மாவட்டங்களில் உள்ளவர்கள் அந்த அந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை நடத்துவது என முடிவு எடுக்க பட்டுள்ளது.
இதில் ஜமாத்துல் உலமா, அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள், அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக உடனடியாக ஆலோசனை நடத்தி அதற்கான ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்தபட்டுள்ளது.