கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை காக்க நாளைய தினம் ஒருநாள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.
இதனை அடுத்து தமிழக அரசும் இந்த உத்தரவை அப்படியே அமல்படுத்த அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளன.
இந்நிலையில் நாளைய தினம் கடைகளுக்கு விடுமுறை என்பதாலும்,மக்கள் வெளியில் வர கூடாது என சுகாதார துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் காய்கனி சந்தைகள், இறைச்சி கூடங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
குறிப்பாக சென்னை சிந்தாதிரிப்பேட்டை மார்கெட்டில் வழக்கத்தை விட அதிகளவில் கூட்டம் கூடியதால் சில மணித்துளிகளிலேயே காய்கறிகள் விற்று முடிந்துவிட்டன என சந்தோசப்படுகிறார் செல்வி என்ற காய்கறி வியாபாரி.