Thursday, March 12, 2026

அதிரையில் தொடரும் மெகா ஊழல்கள்! லட்சங்களை கடந்து கோடியை தொட்டது!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை பேரூராட்சியின் வளர்ச்சி பணிக்காக மத்திய மாநில அரசுகள் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. குறிப்பாக அதிரையில் உள்ள செட்டியாகுளம்(50), செய்னாங்குளம்(50), காட்டுக்குளம்(55) ஆகிய மூன்று பிரதான குளங்களை தூர்வாரி கரைகளை பலப்படுத்த சுமார் ஒரு கோடியே 55 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து டெண்டர்கள் கோரப்பட்டு மூன்று குளங்களிலும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்றன. மூன்று குளங்களை சுற்றிலும் பதிக்கப்பட்ட கற்கள் சில மாதங்களிலேயே பெயர்ந்து போனது.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட காட்டுக்குளத்தின் பணிகள் சரிவர முடிக்கப்படாத நிலையில் தற்போது பரிதாபமாக காட்சி அளிக்கிறது.

எதிர்கால சந்ததிகளின் நலனை பற்றி சற்றும் கவலைப்படாத பணம் தின்ணிகள் குளங்களை கபலிகரம் செய்துவிட்டனர்.

ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அதிரை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

உரிய விசாரணை நடத்தி ஊழல் பெருச்சாளிகள் சிறையில் அடைக்கப்படுவார்களா? பொருத்திருந்து பார்ப்போம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம்...

அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல்...

மரண அறிவிப்பு-முட்டைக்கடை ஜெஹபர் அலி.

மேலத்தெருவை சேர்ந்த முட்டைக்கடை கபீர் அவர்களின் மகனும்,மர்ஹும் தம்பி சுல்தான் அவர்களின் மருமகனும், கமாலுதீன்,சேகப்துல் காதர்,சாகுல் ஹமீது இவர்களின் சகோதரரும், அகமது அஜாரின்...
spot_imgspot_imgspot_imgspot_img