Saturday, May 4, 2024

அதிரைக்கு வந்த அரசு பேருந்து ! பொதுமக்கள் வியாபாரிகள் மகிழ்ச்சி !!

Share post:

Date:

- Advertisement -

கொரோனா நோயால் போடப்பட்ட ஊரடங்கில் பொது போக்குவரத்தை மத்திய மாநில அரசுகள் தடுத்து வைத்து இருந்தன.

இந்நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால் மத்திய அரசு சில தளர்வுகளை ஏற்படுத்த மாநில அரசுகளுக்கு பரிந்துரைத்து உள்ளது.

இதன் அடிப்படையில் தமிழக அரசு 50℅ பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கியுள்ளது.

அதன் அடிப்படையில், அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்திற்கு இன்று காலை வந்த முதல் அரசு PP பேருந்தை அதிராம்பட்டினம் காவல்துறை ஆய்வாளர் ஜெயமோகன், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அன்பரசன், நகர அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் சமூக இடைவெளிவிட்டு வரவேற்றார்.

பின்னர் பேரூராட்சி ஊழியர்களால் பேருந்து முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பயணிகளை அனுமதித்தனர்.

பேருந்து இருக்கைகளில் ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்ல அனுமதிக்கபடுவர் என்று, கூட்டமாக பேருந்தில் ஏற அனுமதியில்லை என நடத்துனரால் தெரிவிக்கப்பட்டதுடன், பயணிகள் கண்டிப்பாக வாய் மூக்கு கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் வாய் மூக்கு கவசம் இன்றி பேருந்துகளில் பயணிக்க அனுமதி மறுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பயணிகள் ஏறும்போதும் இறங்கும் போதும் பேருந்துகளில் வைக்கப்பட்ட சானிடைசர்களை உபயோகப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.

முதல் நாள் என்பதால் போதிய பயணிகள் இன்றி காணப்பட்டது.

அதிரைக்கு பேருந்து வசதி கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...