Friday, March 20, 2026

மல்லிப்பட்டிணம் அருகே பயங்கர தீ விபத்து

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அருகே செம்பருத்தி நகரில் ஐந்து குடிசை வீடுகள் எரிந்து நாசம்.

அந்த பகுதியில் வசிப்பவர்கள் தினக்கூலி வேலைக்கு வழக்கம்போல் சென்றிருந்தனர்.குடியிருப்புகளில் யாரும் இல்லை.இந்நிலையில் இன்று(ஜூன்.4) மதியம் 2 மணியளவில் எதிர்பாராதவிதமாக குடிசை ஒன்றில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.காற்றின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தால் தீயானது பக்கத்தில் உள்ள குடிசைகளிலும் பரவத்தொடங்கியது. புகை மண்டலத்தை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தீ மேலும் பரவா வண்ணம் தடுக்க தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர்.

மேலும் பேராவூரணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்த உடன் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வாகன உதவியுடன் தீ பரவாமல் தீயை தீயணைப்பு அதிகாரிகள் அணைத்தனர்.இந்த தீவிபத்தில் ஐவரின் வீட்டிலிருந்த அரிசி,மளிகை பொருட்கள்,ஆடைகள்,நெல் மூட்டைகள் என அனைத்தும் எரிந்து நாசமாயின.சம்பவ இடத்திற்கு வந்த சேதுபாவாசத்திரம் காவல்துறை ஆய்வாளர் அண்ணாதுரை எப்படி தீ விபத்து நேர்ந்தது என விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img