Thursday, December 18, 2025

மல்லிப்பட்டிணம் அருகே பயங்கர தீ விபத்து

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அருகே செம்பருத்தி நகரில் ஐந்து குடிசை வீடுகள் எரிந்து நாசம்.

அந்த பகுதியில் வசிப்பவர்கள் தினக்கூலி வேலைக்கு வழக்கம்போல் சென்றிருந்தனர்.குடியிருப்புகளில் யாரும் இல்லை.இந்நிலையில் இன்று(ஜூன்.4) மதியம் 2 மணியளவில் எதிர்பாராதவிதமாக குடிசை ஒன்றில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.காற்றின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தால் தீயானது பக்கத்தில் உள்ள குடிசைகளிலும் பரவத்தொடங்கியது. புகை மண்டலத்தை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தீ மேலும் பரவா வண்ணம் தடுக்க தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர்.

மேலும் பேராவூரணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்த உடன் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வாகன உதவியுடன் தீ பரவாமல் தீயை தீயணைப்பு அதிகாரிகள் அணைத்தனர்.இந்த தீவிபத்தில் ஐவரின் வீட்டிலிருந்த அரிசி,மளிகை பொருட்கள்,ஆடைகள்,நெல் மூட்டைகள் என அனைத்தும் எரிந்து நாசமாயின.சம்பவ இடத்திற்கு வந்த சேதுபாவாசத்திரம் காவல்துறை ஆய்வாளர் அண்ணாதுரை எப்படி தீ விபத்து நேர்ந்தது என விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய...

அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில்...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.

அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.  வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத்...

பட்டுக்கோட்டை தொகுதியில் பாஜக இல்லை- தமாகா. கோரிக்கை, அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க....

-அமீரகத்திலிருந்து அப்துல்காதர்- பட்டுக்கோட்டை தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் த.மா.கா.: அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க. தனித்த போட்டி?மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியில் களம் இறங்கத் தயாராக...
spot_imgspot_imgspot_imgspot_img