அதிராம்பட்டினம் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோத மணல் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் தலைமைக்கு அவ்வப்போது புகார் வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மாவட்டம் முழுவதும் தீவுரமாக மண் கடத்தலில் ஈடுபடும் நபர்களை கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இதனால் அதிரை உள்ளிட்ட பல பகுதிகளில் ஆற்று மணல் கிடைக்காமல் M சாண்ட் மணலை உபயோகிக்கும் நிலை வந்துள்ளன.
இதனை சாதகமாக பயன்படுத்தி சில சமூக விரோத கும்பல்கள் கடற்கரை மணலை ஆற்று மணல் என கூறி அதிக விலைக்கு விற்ப்பதாக உறுதி செய்யப்பட்ட தகவல் கிடைத்துள்ளது.
கடற்கரை மணலில் உப்பு தண்மை அதிகளவில் உள்ளதால் கட்டும் கட்டிம் வலுவிழந்து உதிரும் நிலை ஏற்படடும் என்று கட்டிட பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வீடுகளில் இதுபோன்ற மணல் பயன்படுத்துவதால் வீட்டின் ஸ்திரத்தன்மை பாதிக்கபடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சொந்த கண்காணிப்பில் வீடுகட்டும் நபர்கள் மண்ணின் தண்மை குறித்து தேர்ச்சி பெற்ற நபர்களிடம் ஆலோசனை செய்து விழிப்புணர்வுடன் செயல் பட வேண்டும் என கொரிக்கை விடுக்கின்றனர்.