கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
காவல் நிலையம் எதிரே உள்ள திருமண மண்டபத்தில் காவல்துறை, பேரூராட்சி மற்றும் பிற அரசுத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அதிரையில் உள்ள ஜமாத்தார்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதில் முகக்கவசங்கள் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தீவிரமாக கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் பொதுமக்களும் அரசுத்துறை அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.