நாளிதழ், வானொலி, தொலைக்காட்சிகளுக்கு பேட்டி தர அதிமுக நிர்வாகிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. ஊடகங்களுக்கு பேட்டி தரக்கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர் . அதிமுக நிர்வாகிகள் ஒவ்வொருவரும் மாறுப்பட்ட கருத்து கூறுவதை தடுக்க இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா இருந்த போது எந்த ஒரு அமைச்சரும், எம்.எல்.ஏ.வும் பேட்டி எதுவும் தரமாட்டார்கள். அவர் மறைவுக்கு பிறகு பல்வேறு அமைச்சர்கள் மாறுப்பட்ட கருத்து தெரிவித்து சலசலப்பை ஏற்படுத்தி வந்தனர். இதற்கு முடிவு கட்டும் விதமாக அதிமுக தலைமை இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது என்று கூறப்படுகிறது . ஆனால், இந்த உத்தரவை ஏற்று அமைச்சர் ஜெயக்குமார் கட்டுப்படுவாராஎன்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனனில் அவர் ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு தினமும் பேட்டி தருவது வழக்கமாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.
தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...





