ஒட்டு மொத்த உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோயின் தாக்கத்தினால் மக்கள் அனைவரும் அச்சப்பட்டு தமிழக அரசின் முழு ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், எளியோர்களின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு SDPI கட்சி பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறது. முதற்கட்டமாக தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரையில் அரிசி , மளிகை பொருட்கள் அடங்கிய கிட் 100 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
இந் நிகழ்ச்சிக்கு SDPI கட்சியின் அதிரை நகரத் தலைவர் S.அஹமது அஸ்லம் தலைமை வகிக்க SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் S.J.சாகுல் ஹமீது, மாவட்ட பொருளாளர் N.M.சேக் தாவுது, WIM மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தீன் நிஷா மற்றும் அதிராம்பட்டினம் நகர செயலாளர் S.M சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக SDPI கட்சியின் மாநிலச் செயலாளர்கள் A. அபூபக்கர் சித்தீக், வழக்கறிஞர் N.சஃபியா மற்றும் நன்கொடை வழங்கிய ஜனாப். பகுருதீன் ஆகியோர் கலந்து கொண்டு மளிகை பொருட்களை வழங்கினர்.