கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கா.அண்ணாதுரை, 25,269 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இதில் பெருவாரியான வாக்குகள் அதிரையிலிருந்து கிடைத்ததாகும். 20 ஆண்டுகளுக்கு பிறகு பட்டுக்கோட்டையை திமுக கைப்பற்றிய சூழலில் தேர்தலுக்கு முன்புவரை அதிரை சந்து பொந்துகளில் எல்லாம் வாக்கு கேட்டு வந்த அவர், தேர்தல் முடிந்ததும் நன்றி சொல்ல வர மறந்தது ஏன் என தெரியவில்லை என்று ஓட்டுப்போட்ட வாக்காளர்கள் மனகுமுறலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நகராட்சி தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு மீண்டும் வாக்கு கேட்டு திமுக எம்.எல்.ஏ, அதிரைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





