அதிரை நடுத்தெரு, காலியார் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு ஒரே மின் மாற்றியிலிருந்தே மின் விநியோகம் இருந்து வந்தது. இதனால் அடிக்கடி மின் அழுத்தம் போன்ற பிரச்சனைகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளி அருகே புதிதாக மின் மாற்றியை மின்வாரிய ஊழியர்கள் அமைத்தனர். இந்த பணியை 11வது வார்டு கவுன்சிலர் இஸ்மாயில் நாச்சியா NKS சரீப் அவ்வப்போது பார்வையிட்டு பணியை விரைவு படுத்த அறிவுறுத்தினார். இந்நிலையில், அந்த மின் மாற்றி நேற்று முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில் நகராட்சி மன்ற துணை தலைவர் இராம.குணசேகரன், எம்.எம்.எஸ்.அப்துல் கரீம், NKS சரீப், சுஹைப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





