SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முகம்மது ரஹிஸ் தலைமையில் அதிரை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் சேக்தாவுது அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முகம்மது புகாரி, அஸ்லம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் தஞ்சை மண்டல தலைவருமான தப்ரே ஆலம் பாதுஷா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்த கூட்டத்தில் அதிரை நகர செயலாளர் ரஜபு முகைதின்,மதுக்கூர் நகர தலைவர் அசார் மற்றும் செயலாளர் பிலால், மல்லிபட்டினம் நகர தலைவர் ஜவாஹிர் மற்றும் பைசல், செம்பை கிளை தலைவர் முத்து மரைக்கான் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இறுதியாக அதிரை நகர தலைவர் சம்சுதின் நன்றியுரை ஆற்றினார். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானங்கள் :
- ஜனவரி 07 மதுரையில் நடைபெற இருக்கும் வெல்லட்டும் மதச்சார்பின்மை மாநாட்டிற்கு நகர, கிளை வாரியாக அதிகமான மக்களை அழைத்து செல்வது
- எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கிளைகளிலும் பாக முகவர்களை தேர்வு செய்வது குறித்தும் பூத் வாரியான கிளைகளை முழுமைப்படுத்துவது
- டிசம்பர் 6 மதுக்கூர் பேருந்து நிலையம் அருகில் நடக்க உள்ள பாபரி மீட்பு போராட்டத்திற்கு பெருவாரியான மக்களை கலந்து கொள்ள செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.