Tuesday, March 17, 2026

அதிரை நாட்டுப்படகு மீனவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று புகார்., உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் வசித்து வரும் நாட்டுப்படகு மீனவர்கள் அவர்களுக்காக அரசால் அனுமதிக்கப்பட்ட தினங்களில் மீன் பிடித்து கொண்டிருக்கும் போது விசைப்படகு மீனவர்கள் அத்துமீறி நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்கும் எல்லைக்குள் வந்து அவர்களுடைய சுமார் 5லட்சம் மதிப்பிலான வலைகளை சேதப்படுத்துவதாகவும், இந்நிகழ்வு அடிக்கடி நடைபெறுவதாலும் இதற்க்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு இன்று(28/12/1017) பட்டுகோட்டை சட்டமன்ற உறுப்பினர் C.V சேகர் தலைமையில் தஞ்சை மாவட்ட ஆட்சியரை சந்தித்தனர்.

இந்நிகழ்வின் போது அதிராம்பட்டினம் அஇஅதிமுக நகர கழக செயலாளர் A. பிச்சை , மீனவர் சங்க தலைவர் கு. பாஞ்சாலன், அஇஅதிமுக நகர துணை M.A.முகமது தமீம் ஆகியோருடன் அதிரை கரையூர் தெரு, ஆறுமுக கிட்டங்கி தெரு, காந்தி நகர், தரகர் தெரு பகுதிகளின் தலைவர்கள் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகிகள் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து முறையிட்டனர்.

இதையடுத்து, மீன் வளத்துறை, வருவாய் துறை, கடலோர காவல் படை ஆகியோருக்கு உடனடி நடவடிக்கை எடுக்க கோரி உத்தரவிட்டார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img