அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் ஆதரவாளர்களை நீக்கும்பணி தற்போது நடந்து வருகிறது. அதன்படி, திருப்பூர், புதுக்கோட்டை, தருமபுரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் 133 பேர் நீக்கப்படுவதாக ஓபிஎஸ் – ஈபிஎஸ் அறிவித்துள்ளனர். நீக்கப்பட்டவர்களுடன் அதிமுகவினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்றும் ஓபிஎஸ்-ஈபிஎஸ் உத்தரவிட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் முன்னாள் எம்பி சிவசாமி உட்பட 66 பேர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 49 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் தருமபுரி மாவட்டத்திலும் 18 பேர் என மொத்தம் 133 பேர் நீக்கப்படவுள்ளனர்என்று தகவல் வெளியாகியுள்ளது
More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...
பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது.
சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...
திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு!
அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...





